tamilnadu

img

மே 26 கருப்பு நாள் போராட்டம்... வைகோ ஆதரவு...

சென்னை:
ஏழாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பிரதமர் மோடி பதவி ஏற்ற நாளை கருப்பு தினமாக கடைபிடிக்கும் விவசாய அமைப்புகள் அமைப்பின் போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திவரும் ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ எனும் அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர்கள் நரேந்திர மோடி பதவி ஏற்று, 7 ஆண்டுகள் நிறைவு அடையும் நாளான மே - 26ஆம் தேதியை ‘கருப்பு நாளாக’ கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரகடனம் செய்துள்ளனர்.அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவும், மே 26ஆம் நாள் ‘கருப்பு நாள்’ போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து இருக்கின்றது.பாஜகவின் ஆட்சி ஏழு ஆண்டுகள் நிறைவு பெறும் மே -26இல் ஒன்றிணைந்து கருப்பு நாள் கடைப்பிடிப்போம்! இப்போராட்டத்திற்கு மதிமுக, ஆதரவை வழங்குகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

;