tamilnadu

img

முகப்பேரில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த  சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாழனன்று (ஜூன் 20) முகப்பேரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் பிரமிளா, செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர்  ஜெ.ஜூலியட், துணைத்தலைவர் எஸ்.பிச்சையம்மாள், எம்.சரஸ்வதி எம்.சி., உள்ளிட்டோர் பேசினர்.