சேதமடைந்த மழை நீர் கால்வாய்களை சீரமைக்க மாதர் சங்கம் கோரிக்கை
அம்பத்தூர், ஜூன் 25- சேதமடைந்த மழை நீர் கால்வாய்களை சீர மைக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பகுதிச் செயலாளர் மகாலட்சுமி தலைமையில் நிர்வாகி கள் சிபி, அனுராதா, ஜோதிஸ்வரி ஆகியோர் அம்பத்தூர் மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி யிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், அம்பத்தூர் மண்டலம் 86ஆவது வட்டத்துக்கு உட்பட்ட மண்ணூர்பேட்டை பகுதியில் உள்ள காமராஜ் நகர் 3ஆவது குறுக்கு தெரு, பெருமாள் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அவை தற்போது சேத மடைந்துள்ளதால், அதில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல் முறை யாக மேல் மூடி அமைக்காத தால் சிறுவர்கள், முதி யோர்கள் தவறி விழக்கூடிய நிலை உள்ளது. எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்பு சேதமடைந்த கால்வாய்களை சீரமைத்து, கால்வாய்களின் மேல் பகுதியை மூடித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிபிஎம் பகுதி செயலாளர் கோபி உடனிருந்தார்.