கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எழுப்பும்
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உறுதி
சென்னை, ஏப். 21 - கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை களின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார். அரசு கலை அறிவியல் மற்றும் கல்வி யியல் கல்லூரிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கவுரவ விரிவுரையாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் கோரி 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சட்டமன்ற கூட்டம் நடந்து வரும் நிலையில் திங்களன்று (ஏப்.21) சென்னை மாநிலக் கல்லூரி வளா கத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, நீதிமன்றத் தீர்ப்பின் படியும், அரசாணை 56ன் படியும் இருகட்டமாக கவுரவ விரிவுரையாளர்கள் படிப்படி யாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்க மிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து மாநகராட்சி சமுதாய கூடத்தில் வைத்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்களை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆதரவு தெரிவித்தனர். அப்போது எம்.சின்னதுரை எம்எல்ஏ, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகி யோர் உடனிருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், “கவுரவ விரிவுரையாளர்கள் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 57ஆயிரத்து 200 ரூபாய் குறைந்தபட்ச ஊதியமாக வழங்க உத்தரவிட்டது. அதனை கூட நிறைவேற்றாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. கவுரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். அரசாணை 56ஐ வெளியிட்ட அரசு, அதனை நிறைவேற்ற வேண்டும். அது கடமை. கோரிக்கைகளை நிராகரிக்க எந்த நியாயமான காரணமும் அரசிடம் இல்லை. கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை களை சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எழுப்பும்” என்றார்.