சென்னை, டிச. 6 - பல்லாவரம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை வழித்தடங்களை மறுக்கட்ட மைப்பு செய்ய வலியறுத்தி வெள்ளியன்று (டிச.6) தாம்பரம் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட் டம் நடத்தியது.
பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் பருகி 2 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவார ணம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தர வேண்டும். தோல் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகளை மழைநீர்க் கால்வாய், கழிவுநீர்க் கால்வாய்களில் நேரடியாக விடு வதை தடுக்க வேண்டும், மக்களுக்கு சுத்த மான குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.தாமோ தரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சி.பிரபாகரன், தாம் பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, பகுதிக்குழு உறுப்பினர்கள் யு.அணில் குமார், ஆர்.விஜயா உள்ளிட்டோர் பேசினர்.