கடலூர்,பிப்.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக் குழு சார்பில் 1,000 கிலோ எடையுள்ள காரல் மார்க்சின் வெண்கல சிலை நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து கட்சி ஆதரவாளர்க ளிடம் பித்தளை, வெண்கலப் பொருட்கள் சேகரித்து வருகின்ற னர். சேகரித்த பொருட்களை இடை கமிட்டி வாரியாகச் சென்று மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பெற்றுக்கொள்கிறார். இதன் முதல் கட்டமாக கடலூர் நகரம் ஒன்றியம் சிப்காட் பகுதிகளில் வீடு வீடாக சென்று சேகரிக்கப்பட்ட பொருட்கள் உ.வாசுகி பெற்றுக் கொண்டார். கடலூர் நகரம், கடலூர் ஒன்றி யம், சிப்காட் கமிட்டி, தனி அரங்கு தோழர்களின் சார்பில் பாத்திரங்கள், பணம் வழங்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் மூசா, கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.சுப்புராயன், எம்.மருதவாணன், கடலூர் நகரச் செயலா ளர் ஆர்.அமர்நாத், ஒன்றியச் செயலாளர் ஜே.ராஜேஷ் கண்ணன், சிப்காட் செயலாளர் சிவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.