சென்னை, அக். 5- அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்றாகவும், உலக உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீனக சங்கத்தல் உறுப்பினராகவும் உள்ளது. மேலும் 171 இனங்கள் மற்றும் 2,500 விலங்குகள் இந்த பூங்காவில் பராமரிக்கப்படுகின்றன. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வில் வன உயிரின பாதுகாப்பிற்காக தேசிய அளவில் முதன் முறையாக மாரத்தான் ஒட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்து 8ஆம் தேதி வரை வன உயிரின வாரவிழா கொண்டா டப்படுகிறது. அதையொட்டி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வன உயிரின பாதுகாப்பு சிறப்பு விழிப்பு ணர்வுக்காக 5 கிலோ மீட்டர் தூரம் ஒடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஓட்டத்திற்கு“வண்டலூர் உயிரி யல் பூங்கா வன ஒட்டம்” எனப் பெயரிட்டு “வன உயிரின பாதுகாப்பிற் கான” ஒட்டமாக சனிக்கிழமை (அக். 5) நடைபெற்றது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதன் முறையாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி ஆசிய சாதனைப் புத்த கத்தில் இடம் பெறுகின்றது. மிக அமைதி யான முறையில் ஒடுவதால் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நிகழ்ச்சியை சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர் தொடங்கி வைத்தார். முதன்மை தலைமை வனப் பாது காவலர் (துறைத்தலைவர்) முனைவர் பெ.துரைராசு முன்னிலை வகித்தார். மேலும் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சஞ்சய்குமார் ஸ்ரீவத்சவா, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (ம) இயக்குநர் யோகேஷ் சிங், அரசுஅதிகாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் நிகழ்ச்சியை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், காமராஜ் துறைமுக அறக்கட்டளை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், காக்னிஷன்ட் டெக்னாலாஜிஸ், கிர சண்ட் கல்லூரி ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.