tamilnadu

மளிகை கடைக்காரரிடம் தகராறு செய்தவர் கைது

தாராபுரம்,  ஜூலை 10- தாராபுரத்தில் பீடி கேட்டு மளிகைக் கடைக்காரரிடம் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டார். தாராபுரம் நேருநகரில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருபவர் இக்பால் (70). இவரின் கடைக்கு அதே பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (35)  என்பவர் அடிக்கடி வந்து  பீடி, சிகரெட் கேட்டு தகராறு செய்து வந் துள்ளார். சம்பவத்தன்று மீண்டும் தகராறு செய்யவே தாராபுரம் காவல்நிலையத்தில் இக்பால் புகார் அளித்தார்.  இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சதீஸ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

;