tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிப்.13 சென்னை வருகிறார் மல்லிகார்ஜூன கார்கே
சென்னை,பிப்.2- மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி  அகில இந்தியத் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே பிப்.13 அன்று சென்னை வருகிறார். முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டா லினை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்து வதற்காக மல்லிகார்ஜூன கார்கே சென்னை வருவதாக கூறப்படுகிறது.

இரு தலைவர்கள் சந்திப்பின்போது தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்  வீடுகளில் ரெய்டு

சென்னை,பிப்.2- சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சி  நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு படையினர் (என்ஐஏ) சோதனை நடத்தினர்.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி யான இடும்பாவனம் கார்த்திக் ஆஜரா குமாறு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பி யிருந்தது.  இந்நிலையில், (பிப். 2)  கோவை ஆலாந்துறை ஆர்.ஜி.நகரில்  ரஞ்சித், காலப்பட்டி முருகன், திருச்சி வயலூர் சாட்டை முருகன், தென்காசி சிவகிரி இசை மதிவாணன், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் முரு கன் விஷ்ணு உள்ளிட்டோர் வீடுகளில் திடீரென சோதனை நடந்தது.

கட்சியை முடக்க பாஜக சதி
இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பாஜக-வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. இந்த சோதனையை நடத்தியுள்ளது.

தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பாஜக திட்ட மிட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது? அவர்க ளுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும்?. என்.ஐ.ஏ.  அதிகாரிகள் என்னிடம்தான் விசாரணை செய்திருக்க வேண்டும்.

பிப்ரவரி 5 ஆம் தேதி விசாரணைக்கு  ஆஜராகும்படி கட்சி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது நானும் நேரில் சென்று ஆஜராக இருக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சென்னை - பெங்களூரு இடையே ரயில் வேகத்தை அதிகரிக்க முடிவு

சென்னை,பிப்.2- ரயில்களின் வேகத்தை படிப்படி யாக அதிகரித்து பயண நேரத்தை குறைக்கும் முயற்சியில் ரயில்வே துறை ஈடுபட்டு வருகிறது. தற்போது அதிக மாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் குறைந்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்றடைகிறார்கள்.

சென்னை-பெங்களூரு-மைசூரு  வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தரம் உயர்த்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங் களூருவுக்கு 200 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவதற்காக தண்ட வாளங்களை தரம் உயர்த்தவும், சில வழித்தடங்களில் புதிய பாதை அமைக்க  வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. ரயில்களை அதிவேகத்தில் இயக்குவதற்கு தண்டவாளம் கட்ட மைப்பு வலுவாக இருக்க வேண்டும்.

 அதனால் அதனை உறுதிப்படுத்த வும் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. சென்னை-பெங்களூரு இடை யிலான 360 கி.மீ. தூரத்தை 4 மணி  நேரத்திற்கும் குறைவாக பயணிக்க இந்த வேகம் உதவும் என்று ஆய்வு  செய்யப்பட்டது. தற்போது வந்தே பாரத் ரயில் 4 மணி நேரத்தில் சென்றடைகிறது.

அதைவிட பயண நேரம் குறையும் வகை யில் 200 கி.மீ. வேகத்தில் இயக்க திட்ட மிடப்பட்டுள்ளது. அதி வேகத்தில் ரயில்களை இயக்குவதற்காக அடிப் படையான பணிகளை செய்வதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இது மார்ச் மாதத்தில் தயார் ஆகி விடும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.