காலமானார்
சென்னை, ஆக.31- ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சிஐடியு தலைவர் எஸ்.இராமலிங்கம் தாயார் செல்லம்மாள் (90) வெள்ளிக்கிழமை (ஆக. 30) காலமானார். அவரது உடலுக்கு டிஆர்இயூ செயல் தலைவர் ஏ.ஜானகிராமன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், சி.திருவேட்டை, ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் செயல் தலைவர் கிருஷ்ணகுமார், பொதுச் செயலாளர் பி.ராஜாராமன், பொருளாளர் சுரேஷ், நிர்வாகி கள் வெங்கடகிருஷ்ணன், ரமேஷ்பாபு, மோகன், பிரான்சிஸ் மெக்கோல்டு, சத்யமூர்த்தி, தங்கராஜ், வேலாயுதம், ருத்ரகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன், இரா.முரளி, வில்லிவாக்கம் பகுதி செயலாளர் மதியழகன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கார்த்திஷ்குமார் உள்ளிட்ட அனைத்து சங்க நிர்வாகிகள், நண்பர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் பாடியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வில்லிவாக்கம் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.
கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
திருவள்ளூர், ஆக.31-புழல் கதிர்வேடு பகுதியிலுள்ள உள்ள கோவிலை சனிக்கிழமையன்று காலை வழக்கம் போல் திறந்தபோது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே காவல்துறைக்கு தகாவல் தெரிவிக்கப்பட்டது.மேலும். இதுபோல் அருகே உள்ள கோவில்களின் உண்டியல்களும் உடைக்கப்பட்டிருந்தது. வெள்ளியன்று இரவு புழல் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் 6 கோவில்களில் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.