tamilnadu

சென்னை ,திருவொற்றியூர் முக்கிய செய்திகள்

8 மாத போராட்டத்திற்கு பிறகு  உயிர் பிழைத்தது ஆண் குழந்தை

சென்னை, ஆக8 சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் காயத்ரி. கடந்த (2018-) ஆண்டு நவமபர் மாதம் இவருக்கு அப்பல்லோ குழந்தை கள் மருத்துவமனையில், பிரசவ காலத்திற்கு முன்பாகவே ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் இதயத்தில் ஒரு ஒட்டை இருப்பது முதலில் கண்டறிய ப்பட்டது. அடுத்து மீண்டும் மீண்டும் நுரை யீரல் செயலிழப்பதும் தெரியவந்தது. தொடர்ச்சியாக கல்லீரலில் மிகவும் அரிதாக வரக்கூடிய புற்றுநோய் கட்டியும் இருப்பது தெரிய வந்தது. அப்பல்லோ குழந்தைகள் மருத்துவ மனையின் குழந்தை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். லதா காஞ்சி பார்த்த சாரதி தலைமையிலான குழுவினர்  அந்த குழந்தைக்கு கீமோதெரபி உள்பட பல்வேறு சிகிச்சைகளை அளித்தனர். முதலில் நுரையீரல் செயல்பாடு நிலை யாக இருக்கவும் பின்னர் இதயத்தில் இருக்கும் ஒட்டைக்கும், நோய்தொற்று பாதிப்புக்கும் சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த குழந்தையின் கல்லீரலில் வழக்கத்திற்கு மாறான எடையுடன் இருந்தது. அது புற்றுநோயை உரு வாக்கும் மிக அரிதான கட்டியாக மாறும் வாய்ப்பிருந்தது. மருத்துவர்கள் கீமோ தெரப்பி அளித்தபோது இதயத்தில் இருந்த ஓட்டை கூடுதல் சிக்கல்களை உருவாக்கி யது. இதயத்திற்குள் நுழையும் ரத்தம், அந்த துளை வழியாக நுரையீரலில் அதிக மாகப் பாய்ந்து, ஆபத்தான அளவிற்கு அழுத்தத்தை அதிகரித்தது. அதனால்  கீமோதெரபி நிறுத்தப்பட்டது. ‘குழந்தை விட்டுக்கொடுக்காமல், தொடர்ந்து போராடினான். அதனால் நாங்களும் அவனுக்காக போராடினோம் என்று டாக்டர் லதா காஞ்சி கூறினார். இருதய அறுவை சிகிச்சை முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, குழந்தையின் கல்லீரலில் இருந்த கட்டி அகற்றப்பட்டது.இருப்பினும் நோய் தொற்று தாக்கியது. இதுமருத்துவர்களுக்கு சவாலாக இருந்தது. இருப்பினும் டாக்டர்கள் தொடர்ச்சியாகபோராடி  சிகிச்சை அளித்ததால் 8 மாத போராட்டத்திற்கு பின்னர் குழந்தையின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. விரைவில் முழுமையாக குணமடைந்த அந்தகுழந்தை வீடு திரும்பியது.

போதை பாக்கு விற்பனை:  5 பேர் கைது

திருவொற்றியூர், ஆக.8- திருவொற்றியூர் தெற்கு மாட வீதியில் உள்ள அண்ணா காலனி யில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட மாவா, குட்கா, போதை பாக்கு விற்கப்படுவதாக திருவொற்றியூர் தனிப்படை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று  குடோனில் மறைத்துவைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ சீவல் பாக்கு, ஜர்தா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த னர். சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த ஆர். கே. நகரைச் சேர்ந்த மாரியப்பன் (42), ஆரோக்கிய நாதன் (32), கார்த்திக் (35), வெங்கடேசன் (38), தீபா (40) ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.