புதுச்சேரி கண்ணன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை, நவ.6- புதுச்சேரி மாநில சட்டப்பேரவை யின் முன்னாள் தலைவர், முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த ப.கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 74.
அவரது மறைவு குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ புதுவை கண்ணன் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்பதை கேட்டு மிகவும் வருந்துகிறேன். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இளம் வயது முதல் பணியாற்றிய கண்ணன், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு புதுவை மக்களிடம் பெரிதும் பிரபலமும் செல்வாக்கும் நன்மதிப்பும் கொண்ட தலைவராக திகழ்ந்து வந்தார்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு, அரசியல் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித் துள்ளார்.
ரங்கசாமி
மறைந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் உடலுக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
ஆம்னி பேருந்துகள் கட்டணம் 30 விழுக்காடு குறைப்பு: அமைச்சர்
பெரம்பலூர், நவ.6- ஆம்னி பேருந்துகள் கட்டணம் 30 விழுக்காடு குறைக்கப்பட்டு இருப்ப தாக அமைச்சர் சிவசங்கர் தெரி வித்தார்.
தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்கு மற்றும் ஏனைய பகுதிகளுக்கு சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கும் கூடுதல் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கும்பகோணம் மற்றும் இதர கோட்ட அரசு போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு பகுதிகளில் பணி யாற்றுபவர்கள் சொந்த ஊர் திரும்பு வதற்காக வரும் 9-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் அரசு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து கட்டணம் நிர்ணயம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதன் பேரில் தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்து நிர்ணயித்த கட்டணங்களில் இருந்து 30 விழுக்காடு குறைப்பு செய்து இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.அதை மீறி கூடுதலாக கட்டணம் வசூலித்தால் உரிமை யாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
சென்னை, நவ.6- தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒரு நாள் உயர்வதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை திங்களன்று (நவ.6)சற்று குறைந் துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல வெள்ளியின் விலை ரூ.20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.78.20-க்கு விற்பனை செய்யப்படு கிறது. ஒரு கிலோ வெள்ளி 78.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.