சென்னை, மார்ச் 14 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி யாற்றி வரும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலு வைத் தொகையை உடனடியாக விடு விக்க வலியுறுத்தி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்-க்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத னன்று (மார்ச் 13) கடிதம் எழுதியுள்ளார்
கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்ப தாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரகப் பகுதி களில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் முக்கிய மான திட்டங்களில் ஒன்றாகும்.
மேலும், ஊரக மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்பை வழங்குவது டன், நீடித்த மற்றும் நிலையான ஊரக சொத்துக்களை உருவாக்கி, உள்ளூர் மக்களின் முனைப்பான பங்கேற்புடன் கிராமங்களை மேம்படுத்தும் ஒரே திட்டமாகும்.
86% மகளிர் 29% தலித்துக்கள் பயனடையும் திட்டம்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இத்திட்டம் அனைவரையும் உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் 86 விழுக்காடு மகளிர், 29 விழுக்காடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் பல்வேறு அளவீடுகளில் தமிழ்நாடு எப்போதும் திட்ட செய லாக்கத்தில் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. இதுவரை, மூன்று தவணைகளில் 37 கோடி மனித சக்தி நாட்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 06.03.2024 வரை தமிழ்நாடு 40.51 கோடி மனித சக்தி நாட்களை எட்டியுள்ளது. இதில் 68.68 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 79.28 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
வழங்கப்பட வேண்டிய ஊதியம் ரூ. 8,734 கோடி
2023-24 ஆம் ஆண்டில், 06.11.2024 வரை தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ஊதியமான ரூ. 8,734.32 கோடியில், ரூ. 7,712.03 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வழங்க வேண்டிய ஊதியப் பொறுப்பு 05.01.2024 அன்று ரூ. 1,022.29 கோடி யாக உள்ளது.
இதுதொடர்பாக தாம் 10.01.2024 அன்று ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு மாண்புமிகு ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்ச ருக்குக் கடிதம் எழுதியதையடுத்து, ஒன்றிய அரசு 15.01.2024 மற்றும் 30.01. 2024 ஆகிய நாட்களில் ரூ.1,388.91 கோடி ஊதியத்தை விடுவித்தது.
24 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 1, 678 கோடி நிலுவை
மேலும், நவம்பர் 2023 கடைசி வாரத்திலிருந்து திறன்சாரா தொழி லாளர்களுக்கான ஊதியம் தொழிலா ளர்களுக்கு வழங்கப்படாததால், அத னுடன் பொறுப்புத் தொகையும் ரூ. 1,678.83 கோடியாக சேர்ந்துள்ளது.
டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த 24.21 லட்சம் குடும்பங் களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டியுள்ளது.
எனவே, 05.01.2024 வரை திரட்டப் பட்ட மொத்த ஊதிய பொறுப்புத் தொகையான ரூ. 1,678.83 கோடியை தொழிலாளர்களுக்கு உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் தனிப்பட்ட தலையீட்டை தாம் எதிர்பார்க்கிறேன்.