சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இருங்குன்றம்பள்ளி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் நேரில் ஆறுதல் கூறினார்.