உள்ளாட்சி தேர்தல் குறித்த மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த அறிவிப்பாணையை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுசீரமைப்புப் பணிகளை முடித்துவிட்டு உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி திமுக உள்ளிட்ட 12 தரப்பினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம். புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் வார்டு மறுவரையறை செய்தபின் 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.மேலும் உள்ளாட்சி தேர்தலுக்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை வாபஸ் பெற்று புதிய அறிவிப்பாணையை வெளியிடவும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது மாநிலத்தேர்தல் ஆணையம் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை வாபஸ் பெற்றுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்த பின்பு வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் மாநிலத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.