tamilnadu

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் வரை சிறை

கள்ளச்சாராயத்தை தயாரிப்பவர்கள் விற்பனை  செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு,  10 லட்சம் ரூபாய் வரை 
அபராதத் தொகை

சென்னை, ஜூலை 12 - தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் கள்ளச்சாராயம் தொடர்புடைய வழக்குகளில் ஆயுள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10  லட்சம் வரை அபராதம் விதிக்கும் தமி ழக அரசின் சட்டம் விரைவில் நடை முறைக்கு வருகிறது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷ சமுத்திரம் பகுதி களில் ஜூன் 19 அன்று விஷச் சாராயம் குடித்த 229 பேர் உடல் நலம் பாதிக்கப் பட்டனர். 66 பேர் வரை பலியாகினர்.  தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துயரத்தைத் தொட ர்ந்து, கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், அதற்கான தண்ட னைகளை கடுமையாக்க வகைசெய் யும் மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதா வை, தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 29 அன்று சட்டப்பேரவையில் நிறை வேற்றியது.

இதில், கள்ளச்சாராயத்தை முற்றிலு மாக ஒழிக்கும் வகையில், அதை தயா ரிப்பவர்கள்- விற்பனை செய்பவர் களுக்கு ஆயுள் வரை கடுங்காவல்  தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை அபராதத் தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளை விதிப்பதற்கான சட்டத்திருத்தத்தை மேற்கொண்டது.

இந்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்து பேசிய அமைச்சர் எஸ். முத்துச்சாமி, “தற்போதுள்ள 1937-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் படி விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்வது, ஏற்றுமதி செய்வது, அருந்துதல், மனித உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய கள்ளச் சாராயத்தை தயாரித்தல், உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்வது போன்று வழக்க மாக நடைபெறும் குற்றங்களுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதி இச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மேலும், “தற்போதைய சட்டத் திருத்தத்தில் சிறைத் தண்டனையின் கால அளவும், அபராதத் தொகை யினுடைய அளவும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மதி மயக்கக்கூடிய மருந்தினை தயாரிப் பது, கொண்டு செல்வது, வைத்திருப் பது மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அந்த மதுவினை அருந்துவதால் மரணம் ஏற்பட்டால் ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையோடு பத்து லட்ச ரூபாய் வரைக்கும் அபராதத் தண்டனை விதிக்க திருத்தம் செய்யப்பட்டிருக் கிறது. இதேபோல குற்றங்களில் பயன் படுத்தக்கூடிய அனைத்து அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்வதோடு மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்களை மூடி முத்திரையிடவும், இந்த குற்றங்களை செய்யக்கூடிய நபர்  எதிர்காலத்தில் இது போன்ற  குற்றங் களை செய்வதிலிருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு பிணை முறிவினை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது” என்றும் விளக்கினார். இந்த திருத்த மசோதா, உறுப்பினர் களின் விவாதத்திற்கு பின் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தம்) சட்டம் என  அழைக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டு, உடனடியாக ஆளுநரின் ஒப்புத லுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கடுமை யான தண்டனைகளை விதிக்கும் மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா வுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.