tamilnadu

மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜக

சென்னை, ஏப். 12 - மதச்சார்பின்மை, பொருளாதார இறை யாண்மை, கூட்டாட்சி, சமூக நீதி ஆகிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நான்கு ஆதாரத் தூண்களையும் திட்டமிட்ட முறை யில் சிதைத்து வருகிற பாஜக அரசைத் துடைத் தெறிய வேண்டும். என்று தமிழக வாக்கா ளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்தார்.

மத்தியசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்கு கேட்டு வியாழனன்று (ஏப்.11) புரசை வாக்கத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய சீத்தாராம் யெச்சூரி, ரமலான் நோன்பு முடித்து ரம்சான் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு மட்டு மின்றி பன்முகத் தன்மையோடு அந்தக் கொண்டாட்டத்தில் இணையும் எல்லோருக்குமான இனிய வாழ்த்துகள் சொல்லித் தனது உரையைத் தொடங்கி னார்.

“இந்த விழுமியத்தைக் கீழ்மைப் படுத்தும் மோசமான அரசியலைத் தொடர்ந்து செய்துவருகிறது மோடி அரசு.  அதனால்தான், வேண்டுமென்றே, தேர்தல் அறிவிப்புக்குச் சற்று முன்பாகக் குடி யுரிமைச் சட்டத் திருத்த விஷயத்தைக் கை யிலெடுத்தது” என்று குற்றம் சாட்டினார்.  

மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜக
“தமிழகத்தின் வெள்ளப் பேரிடர் துயர் துடைக்க மாநில திமுக அரசு 37ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கேட்டபோது, ஒற்றைப் பைசா கொடுக்க மறுத்துவிட்டது மோடி அரசு. கேரள அரசு கேட்ட கோரிக்கை க்கும் அதேதான் பதில். கூட்டாட்சி தத்து வத்தைக் கீழே போட்டு மிதிக்கிறது பாஜக அரசு. மாநில மக்களுக்கு  எந்த உதவி யும் செய்ய மனமில்லாத மோடி  தமி ழகத்திற்கு 8 முறை பயணம் வந்துவிட்டுப் போயிருக்கிறார். இங்கிருந்து நேரே ராஜஸ்தான் போய், ஊழலை ஒழித்துக் கட்டு வேன், ஊழல்வாதிகளைப் பிடித்துச் சிறை யில் போடுவேன் என்று சூளுரைக்கிறார்” என்று சுட்டிக்காட்டிய யெச்சூரி, சுதந்திர இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரும் ஊழல் ஆட்சி மோடி ஆட்சிதான் என்று சுட்டிக்காட்டினார்.

கெடுகெட்ட மாயாஜாலம்
ஊழலைப் பற்றிப் பேசும் அருகதை அற்றது மோடி அரசு என்று குறிப்பிட்ட யெச்சூரி, “முதல் நாள் வரை ஊழல் பட் டம் சூட்டப்பட்ட எதிர்க்கட்சி பிரமுகர்கள் பாஜக பக்கம் தாவிவிட்டால் அடுத்த நொடி யே உத்தம புத்திரர்களாக மாறி விடும் கேடு கெட்ட மாயாஜாலத்தை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்” என்றார்.ஊழலை சட்டபூர்வமாக்கிவிட்டது பாஜக. வரு வாய்த் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட எல்லா சுயேச்சையான அமைப்புகளை யும் தங்கள் அரசியல் ஆதாயத்திற்குப் பயன் படுத்தி நிறுவனங்களை அரட்டி மிரட்டி தேர்தல் பத்திரங்களை வாங்கித் தங்களுக்கு வழங்க வைத்திருக்கிறது பாஜக.

எங்கிருந்து வந்த பணம்?
மொத்தப் பத்திர மதிப்பில், பத்தாயிரம் கோடி  ரூபாய்க்கு மேல் பாஜக அடித்திருக்கிறது. கொஞ்ச மும் லாபம் ஈட்டாத அல்லது நஷ்டத்தில் ஓடும் கம்பெனிகள் எல்லாம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்க்கு பத்திரங்கள் வாங்கி பாஜகவுக்கு வழங்கி இருக்கும் பணம் எப்படி வந்தது, யார் கொடுத்தது, அந்நிய நாடுகளில் இருந்தா?” என்று  கேள்வி எழுப்பினார் யெச்சூரி.

எப்படியெல்லாமோ கொள்ளை அடித்த பணத்தை பாஜகவுக்கு ஏன் கொடுக்கின்றனர் எனில், கைம்மாறாக காண்ட்ராக்டுகளைப் பெற்றுக் கொண்டனர் என்பதையும் சுட்டிக் காட்டிய யெச்சூரி, கார்ப்பரேட் - மதவெறி கூட்டு இந்தத் தேச சொத்துக்களை எல்லாம் சூறை யாடிக் கொண்டிருக்கிறது என்று சாடினார்.

அதிமுகவையும் வீழ்த்துக!
மதவாதத்தால் மக்களைப் பிரிக்கும் மோச மான அரசியலுக்குத் தமிழக மக்கள் கடந்த  தேர்தலைப் போலவே இப்போதும் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். திமுக தலைமை யிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் பெரு வெற்றி பெற வேண்டும். தொடர்ச்சியாக பாஜக வோடு கூட்டணி வைத்திருந்த அதிமுகவையும் பாஜகவையும் சேர்த்துத் தோற்கடிக்க வேண்டும். எந்த விதத்திலும் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடாதபடி ஒட்டுமொத்தமாக இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவைத் திரட்டி தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மொத்தமாக பாஜகவை முறியடிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

மத்திய சென்னையில் தயாநிதி மாறன், வடசென்னையில் கலாநிதி வீராசாமி, தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் மூன்று  வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டு தனது உரையை  நிறைவு செய்தார்.

அமைதி தவழும் மாநிலம்
திமுக சென்னை கிழக்கு மாவட்டச் செயலா ளரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு பேசுகை யில், அமைதி தவழும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மதம், இனத்தால் பிளவுபடாமல் மக்கள் சகோதரர்களாக வாழ்கின்றனர். அவரவர் விரும்பும் மதத்தை பின்பற்ற, கடவுளை வணங்க சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்கும். பகைமையை மூட்டி, மக்களை பிரிக்கும் பாஜகவை வீழ்த்துவோம் என்றார்.

கதைகட்டும் ஆர்எஸ்எஸ்
வேட்பாளர் தயாநிதிமாறன் பேசுகையில், வடஇந்தியாவில் பாஜக செல்வாக்கு சரிந்து  வருகிறது. அதனை தடுத்து நிறுத்த ஆர்எஸ்எஸ் நுட்பமாக கதை வசனம் எழுதிக் கொண்டி ருக்கிறது. அதாவது, பாஜகவின் செல்வாக்கு தமிழகத்தில் அதிகரித்துவிட்டது; 3 விழுக்காடு வாக்கு  20 விழுக்காடாக உயர்ந்துவிட்டது; நாடுமுழுவதும் பாஜகதான் வெற்றி பெறப் போகிறது என்று ஊடகங்கள் வாயிலாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்ல முடியாது. இதை நாடு முழுவதும், குறிப்பாக வட மாநிலங் களுக்கும் கொண்டு செல்வோம் என்றார்.

உற்சாக வரவேற்பு 
பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த சீத்தாராம் யெச்சூரியை மாணவர் சங்கம் மற்றும்  வாலிபர் சங்கத்தின் இளம் தோழர்கள் உற்சாக வர வேற்பு அளித்து ஆர்ப்பரித்து அழைத்து வந்தனர்.

இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமை தாங்கினார். சென்னை மேயர் ஆர்.பிரியா, அ.வெற்றியழகன் எம்எல்ஏ, திமுக செய்தி தொடர்பு இணைச் செய லாளர் தமிழன் பிரசன்னா, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகநயினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சர்வேசன், கே.ஆறுமுகம், எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முருகன், பகுதிக்குழு உறுப்பினர் ஜெ. பார்த்திபன் உள்ளிட்டு கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். ‘காம்ரேட் கேங்ஸ்டா’ குழுவினரின் இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.