tamilnadu

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்: ஒரு மாதம் நடைபெறுகிறது ....

சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மற்றும் மானியக் கோரிக் கைகள் மீதான விவாதம் 29 நாட்கள் நடைபெறுகிறது என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வு குழு பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றபோதும் எதிர்க் கட்சியான அதிமுக புறக்கணித்தது.இக்கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் மு. அப்பாவு கூறியதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 13 ஆம் தேதி கலைவாணர் அரங் கத்தில் தொடங்குகிறது. அன்றைய தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

காகிதம் இல்லா பேரவை
இந்த முறை சட்டப்பேரவையில் காகிதம் இல்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய் யப்படுகிறது. சட்டப்பேரவையில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களின் இருக்கை முன்பு வைக் கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் திரைகளில் தெரியும். இது தவிர எம்.எல்.ஏ.க்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்கப்படும். அதை புத்தகத்தை புரட்டுவது போல் நிதி நிலை அறிக்கை பக்கங்களை பார்த்துக் கொள்ளலாம்.

வேளாண் நிதி நிலை அறிக்கை
சனிக்கிழமை (14 ஆம் தேதி) வேளாண் மைக்கு தனியாக நிதி நிலை அறிக்கை தாக் கல் செய்யப்படுகிறது. இதை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல் வம் தாக்கல் செய்கிறார். இந்த இரண்டு நிதி நிலை அறிக்கைகள் மீதும் 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 4 நாட்கள் விவாதம் நடைபெறும். அதன் பிறகு 2 அமைச்சர்கள் பதில் அளித்து பேசுவார்கள். ஆக. 23 ஆம் தேதி முதல் மானிய கோரிக்கைகளை அந்தந்த துறை அமைச்சர்கள் தாக்கல் செய்வார்கள். 23 நாட்கள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். மொத்தம் 29 நாட்கள் பேரவை நடைபெறும் என்றார்.

மானியக் கோரிக்கைகள் விவரம்
ஆக. 23 அன்று நீர்வளத்துறை , 24 ஆம் தேதி நகராட்சி நிர்வாகம், 25 ஆம் தேதி ஊரக வளர்ச்சித்துறை, 26 ஆம் தேதி கூட்டுறவு மற்றும் உணவு துறை, 27 ஆம் தேதி பள்ளி கல்வித்துறை, உயர்க்கல்வி, 28 ஆம் தேதி நெடுஞ்சாலைத்துறை, 29, 30 விடுமுறை.31 ஆம் தேதி வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம். செப்டம்பர் 1 ஆம் தேதி வருவாய் துறை, 2 ஆம் தேதி தொழில்துறை, தமிழ்வளர்ச்சித்துறை, 3 ஆம் தேதி வீட்டு வசதித்துறை, சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, 4 ஆம் தேதி மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, 5 ஆம் தேதி விடுமுறை.

சுகாதாரம்
6 ஆம் தேதி மருத்துவம், 7 ஆம் தேதி வனம், சுற்றுச்சூழல், 8 ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, 9 ஆம் தேதி கைத்தறி, வணிகவரித்துறை, 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை. 11, 12 அரசு விடுமுறை.

மின்சாரம்-தொழிலாளர் நலன்
13 ஆம் தேதி எரிசக்தி துறை, மதுவிலக்கு, தொழிலாளர் நலத்துறை, 14 ஆம் தேதி பிற்ப டுத்தப்பட்டோர் நலத்துறை, 15 ஆம் தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.

போக்குவரத்து-செய்தித்துறை
16 ஆம்தேதி நீதி நிர்வாகம், சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரம், 17 ஆம் தேதி போக்குவரத்துத்துறை, 18 ஆம் தேதி காவல் மற்றும் தீயணைப்புத்துறை.

காவல்துறை
20 ஆம் தேதி காவல் மற்றும் தீயணைப்புத் துறை, நிதித்துறை, மனிதவள மேலாண்மைத்துறை, 21 ஆம் தேதி பொதுத்துறை, மாநில சட்டமன்றம்.அரசின் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படுகிறது. 

;