சென்னை, ஜூலை 25- பதவி உயர்வுகளில் இட ஒதுக் கீட்டை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அர சுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு: பதவி உயர்வுகளில் இட ஒதுக் கீடு வழங்கப்படுவதற்கு எதிரான வழக்குகளில், உச்சநீதிமன்ற மும், சென்னை உயர் நீதிமன்ற மும் அளித்த தீர்ப்புகளினால் ஏற் பட்ட பாதிப்புகள் சரி செய்யப் படாத நிலை நீடிக்கிறது.
பதவி உயர்வில் ஏற்கெனவே நடை முறையில் இருந்து வந்த இட ஒதுக்கீடு மீது பெரும் பாதிப்பை யும் ஏற்படுத்தியுள்ளது. இது காலங்காலமாக சாதிய ஒடுக்கு முறைக்கு ஆளாக்கப்பட்ட பகுதி யினருக்கு இழைக்கப்படும் அநீதியாகும். கொள்கை முடிவு கள் எடுக்கிற இடங்களில் ஒடுக் கப்பட்ட பிரிவினரின் பிரதிநிதித் துவம் மிகக் குறைவாக இருப் பது அத்தகைய கொள்கை முடிவு களிலும் சமூக நீதிக்கு எதிரான அணுகுமுறைகளுக்கு வழி வகுக்கிறது.
ஓரிரு தலைமுறை கள் மட்டுமே இட ஒதுக்கீட்டு பய னைப் பெற்று முன்னேறி இருக் கிற சூழலில் இத்தகைய பாதிப்பு சமூக ரீதியான மிகப்பெரும் பின் னடைவாகும். நீதிமன்ற தீர்ப்புகளின் எதிர் மறைத் தாக்கங்களை சரி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கங் களுக்கு உண்டு.
அதற்கு சட்டப் பூர்வமான வழிகளும் இருக்கின் றன. 2022 இல் தமிழ்நாடு அரசு, சட்ட நிபுணர்களையும் உள்ளடக் கிய ஒரு குழுவை அமைத்து, பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு தொடர்வதற்கான சட்ட வழி வகைகளை ஆய்வு செய்து பரிந் துரைக்குமாறு பணித்தது. இத்த கைய முயற்சிகள் விரைவுபடுத் தப்பட்டு பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டை பாதுகாக்கின்ற சட் டம் தமிழ்நாட்டில் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை களும் இடதுசாரி கட்சிகள், தலித் இயக்கங்கள், சமூக நீதி அமைப் புகள் சார்பாக முன்வைக்கப் பட்டன. ஆனாலும் இதற்கான முயற்சிகள் விரைவுபடுத்தப்பட வில்லை.
இன்று வரை தீர்வு காணப்படாத நிலைமையே நீடிக்கிறது. இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் பதவி இறக்கங்களை தடுத்திடுக! இதற்கிடையில் தமிழ்நாட் டின் பல்வேறு துறைகளில் ஏற்க னவே பதவி உயர்வு பெற்ற இட ஒதுக்கீட்டு பிரிவினர் பதவி இறக்கம் செய்யப்படுகிற செய்தி கள் வேதனைக்குரியதாகும்.
இது பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப் பட்ட பிரிவுகளைச் சார்ந்த ஊழி யர்களின் நலன்களை பாதிக் கிறது. சாதியச் சமூகத்தின் உள வியல் தாக்குதலுக்கும் அவர் களை ஆளாக்குகிறது. வரலாற்றில் சமூக நீதிக்கான முன்னெடுப்புகளில் தமிழ்நாட் டிற்கு சிறப்பான இடம் உண்டு. ஆகவே பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்வ தற்கான சட்டத்தை இயற்றி இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் பதவி இறக்கங்களை தடுக்க வேண்டும். தொடர்ந்து பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளனர்.