tamilnadu

img

தோழர் ப.மனோகரன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

சென்னை, செப். 25 - தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மேனாள் மாநிலப் பொதுச் செயலாளர் முனைவர் ப.மனோ கரன் செவ்வாயன்று (செப்.24) கால மானார். அவருக்கு வயது 57.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சி, அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான ப.மனோகரன், பள்ளிக்குச் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தோழர் ப.மனோகரன் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகியாக செயல்பட்டவர். ஜாக்டோ ஜியோவின் மேனாள் உயர்மட்டக் குழு உறுப்பின ராகவும் செயல்பட்டுள்ளார். ஆசிரியர் -அரசு ஊழியர்களின் போராட்டக் களங்களில் முன்னணியில் இருந்து செயல் பட்டவர்.

பாளையங்கோட்டை தியாகராஜர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மூத்த தலைவர் வீ.பழனி, மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் சே.பிரபாகரன், பொதுச்செயலாளர் பொ.அன்பழகன், பொருளாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் முத்தையா, இராவணன், மகேந்திரன், மாயவன், அஜின், முன்னாள் தலைவர்கள் செல்லத்துரை, இலஞ்சி மாரியப்பன், சுரேஷ், வள்ளிவேலு, தமிழ்நாடு மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலப் பொருளாளர் இரா.பிரபுதாஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.