3 குற்றவியல் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சிபிஎம் சார்பில் சோத்துப்பாக்கத்தில் கீழ்மருவத்தூர் கிளை செயலாளர் ஐயப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.புருசோத்தமன், வழக்கறிஞர் சங்கம் மதுராந்தகம் தலைவர் வழக்கறிஞர் வி.இராஜபாரதி, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.செந்தமிழன், வழக்கறிஞர்கள் பிரகாஷ்,சங்கம் விஜயகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.