கோடை காலத்தில் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் அனைவரும் கருப்பு - வெள்ளை உடைக்கு மேல், கருப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை, கருப்பு கவுன் ஆகியவற்றை அணிந்து ஆஜராக வேண்டும். மெட்ராஸ் பார் அசோசியேசன் தரப்பில் வைக்கப்பட்ட கோரிகையை ஏற்று, ஆண்டுதோறும் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிய வேண்டியதில்லை எனவும், அதே சமயம் கருப்பு கோட் மற்றும் கழுத்தில் வெள்ளை பட்டை அணிவது கட்டாயம் எனவும் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.