tamilnadu

img

சிதம்பரத்தில் சட்டக்கல்லூரி துவங்க வேண்டும்

சிதம்பரத்தில் சட்டக்கல்லூரி துவங்க வேண்டும் 

இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

சிதம்பரம், மே 20- சிதம்பரத்தில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிதம்பரத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் நகர மாநாடு தோழர் சங்கரய்யா அரங்கத்தில் நடைபெற்றது. மாணவர் சங்க நகரத் தலைவர் ராகுல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சபரி வரவேற்றார்.  விமல் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் குமரவேல் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.  நகர செய லாளர் சசிதரன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். கடலூர் மாவட்டச் செயலாளர் சௌமியா,  வாலிபர் சங்க நகர தலைவர் ராஜா ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.  15 பேர் கொண்ட நகரம் குழுவின் தலைவராக சிவநந்தினி,  செயலாளராக சபரி ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர்.  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் உணவுத்துறை சார்ந்த புதிய துறைகள் துவக்க வேண்டும், சிதம்பரம் நகரில் உள்ள அரசு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.