செங்கல்பட்டு, ஜூலை 17- சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாள்தோறும் தாமத மாக இயக்குவதால் பயணி கள் செங்கல்பட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் காஞ்சிபுரத்தில் நடை பெற்றுவரும் அத்திவரதர் திருவிழாவிற்கு ஆயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதற்காக சென்னை கடற்கரையி லிருந்து தாம்பரம், செங்கல் பட்டு, அரக்கோணத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படு கின்றது. இதேபோல், செங்கல் பட்டிலிருந்து, காஞ்சி புரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. இதனால் நாள்தோறும் சென்னையிலிருந்து செங்கல்பட்டிற்கு இயக்க ப்படும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு ள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு பல்வேறு பணிக்கு வந்து செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் செவ்வா யன்று (ஜூலை 16) இரவு சென்னையிலிருந்து செங்கல்பட்டிற்கு இயக்கப்ப டும் மின்சார ரயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்பட்ட தால் ஆத்திரமடைந்த ரயில் பயணிகள் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தண்ட வாளத்தில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகரக் காவலர்கள் மற்றும் ரயில்வே காவலர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். மின்சார ரயில்கள் குறைவாக இயக்கப்படு கிறது. அதிலும் தாமதமாக இயக்கினால் எவ்வாறு பணிக்குச் சென்று திரும்ப முடியும் என வாக்கு வாதத்தில் பயணிகள் ஈடுபட்டனர். இதேபோன்று செங்கல்பட்டு அடுத்த பாலூரில் சரக்கு ரயில்க ளுக்கு வழிவிடுவதற்காக பயணிகள் ரயிலைக் காக்க வைப்பதால் பாதிக்கப்படுவ தாகப் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்து வந்த காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.