tamilnadu

img

பள்ளிச் சீருடைகள் வழங்க தாமதமா?எடப்பாடிக்கு அமைச்சர் பதில்!

சென்னை ஆக. 6 - சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, “ பெண்களின் உயர்கல்விக்காக வழங்கப் படும் புதுமைப்பெண் திட்டம் மூலம் ஆண்டுக்கு மூன்றே கால் லட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். மூன்றாவது வருடம் படிக்கும் பெண்கள் புதுமைப்பெண் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவில்லை என் றால் இந்த ஆண்டு கூட விண்ணப்பிக்கலாம்” என்றார்.

உயர்கல்வி பயிலும் மாண வர்களுக்கு மாதந்தோறும்  ரூ. 1000 வழங்கும் தமிழ்ப்புதல் வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 9  அன்று கோவையில் தொடங்கி வைக்கவுள்ளார். 

பள்ளிச் சீருடைகள் தாமத மாக வழங்கப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரியா மல் குற்றச்சாட்டை வைத்திருக் கிறார். சில பள்ளிகளில் அளவு சரியாக இல்லாமல் இருந்ததாக சில புகார்கள் வந்  தன. தையல் சொசைட்டியில் உள்ள பெண்கள் நேரடியாக பள்ளிகளுக்குச் சென்று அள வெடுத்து அந்தந்த பிள்ளை களுக்கு தனித்தனியாக பள்ளிச் சீருடைகள் தைக்கப் படுகின்றன. அதனால் சிறிது காலதாமதம் ஏற்பட்டது. 4  செட் பள்ளிச் சீருடை உண்டு, விரைவில் இந்த மாதம் வழங்கி விடுவோம். அளவெடுத்து தைப்பதால் 15 நாட்கள் தாமதம் ஆகிவிட்டது.

குழந்தை திருமணம் தொடர்பாக தற்பொழுதும் புகார்கள் வருகின்றன.  அந்த விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. தமிழ் நாட்டில் குழந்தை திருமணங் கள் குறைந்து வருகிறது. குழந்தை திருமணங்களுக்கு எதிராக அரசு கடுமையான நட வடிக்கைகளை எடுத்து வரு கிறது என்றும் அமைச்சர் கூறி னார்.