சென்னை ஆவடி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது, விஷவாயு தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பு வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது, விஷவாயு தாக்கி சுரேஷ் என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.