சென்னை தனியார் நிறுவனத்திற்கு ரூ.566 கோடி அபராதம் விதித்த அமலாக்கத்துறை
முறைகேடாக பங்குகளை விற்பனை செய்த சென்னை தனியார் நிறுவனத்துக்கு ரூ.566 கோடி அபராதத்தை அமலாக்கத்துறை விதித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையைச் சேர்ந்த ஜிஐ ரீடெயில் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் முறைகேடாக பங்குகளை விற்பனை செய்து அதன்மூலம் கிடைத்த ரூ.195 கோடியை மறைத்து அத்தொகையை ஐக்கிய அரபு நாடுகளில் இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிறுவனத்தில் மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாக அமலாக்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அமலாக்கத் துறை இயக்குநர் தென்மண்டல அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தியபோது அந்தத் தகவல் உண்மைதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.195 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை அரசுடமையாக்க அமலாக்கத்துறை விசாரணை ஆணையம் உத்தரவிட்டது. மேலும் அந்த நிறுவனத்துக்கு ரூ.566.5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை
சென்னை,நவ.3- தமிழ்நாட்டில் திங்கட் கிழமை முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழக கட லோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதி களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களின் அநேக இடங்களில், வட தமிழகத்தின் உள் மாவட்டங் களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நவம்பர் 9 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நக ரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீட் தேர்வுக்கு தவெக கடும் எதிர்ப்பு
சென்னை,நவ.3- தமிழக வெற்றிக் கழ கத்தின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவ.3) சென்னையை அடுத்த பனையூரில் கட்சித் தலைவர் விஜய் தலைமை யில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தை ஒன்றிய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கல்வியை மாநில அரசு பட்டியலுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் கொள்கை க்கு கண்டனம் தெரிவித்தும் பாலியல் குற்றவாளி களுக்கு உச்சபட்ச தண்ட னை வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்.தமிழ் மொழியில் தலையிட ஒன்றிய அரசு, ஒன்றிய அர சின் பிரதிநிதிகளுக்கு உரிமை இல்லை; உச்சநீதி மன்ற கிளையை சென்னை யில் அமைக்க வேண்டும். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும், மாதம் ஒரு முறை மின் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், கால நிர்ணயம் செய்து மதுக்கடை களை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகம் முழுவதும் முப்படை ஓய்வூதியர்களுக்கு குறைதீர் முகாம்
சென்னை,நவ.3- ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் முறையில் வாழ்நாள் அடையாளச் சான்றிதழ் காணும் முகாம் ஒன்றிய அரசால் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இம் மாதம் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் அடையாளச் சான்றிதழ் காணவும், அவர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை தீர்க்கவும் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ‘ஸ்பர்ஸ்’ (SPARSH) ஓய்வூதியர் குறைதீர்ப்பு முகாம் நவம்பர் மாதத்தில் நடத்தப்படுகிறது. அதன்படி, நவம்பர் 4- சென்னை. நவம்பர் 6 கிருஷ்ணகிரி. நவம்பர் 11 திருப்பூர். நவம்பர்14 தஞ்சாவூர். நவம்பர் 21 மதுரை. நவம்பர் 26 கோயம்புத்தூர், நவம்பர் 29 சென்னை ஆவடி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது என்று சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.