ரத்தானம்: விளையாட்டு வீரருக்கு பாராட்டு...
30வது ஆண்டாக 50 தடவைக்கு மேலாக ரத்ததானம் அளித்து வரும் டேபிள்டென்னிஸ் பயிற்சியாளர் இரா.எத்திராஜன் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு சிறப்பு மருத்துவனையில், ரத்ததானம் வழங்கினார். அவருக்கு மருத்துவர் லாவண்யா பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
கல்விக் கட்டணத்தை வங்கியில் செலுத்துவதாகக் கூறி நூதன மோசடி
சென்னை, ஜூன் 9- கொருக்குப்பேட்டை கார்னேசன் நகரை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் கூலிவேலை செய்து வருகிறார் இவரது கணவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். வறுமையில் இருந்தாலும் மகனை 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக மகன் பயிலும் தனியார் பள்ளிக்கு மாரியம்மாள் சென்றுள்ளார். அப்போது பள்ளி நுழைவாயிலில் இருந்த மர்ம நபர் ஒருவர் பணம் செலுத்தும் கவுண்டர் மூடிவிட்டனர். கட்டணத்தை வங்கியில் செலுத்தி அந்த ரசீதை பள்ளிக்கு தர வேண்டும். தானும் தன் மகனுக்கு வங்கியில் தான் கட்டணம் செலுத்தப் போவதாக கூறியுள்ளார்.
இதை நம்பி மாரியம்மாள் தான் வைத்திருந்த 23,500 ரூபாயை அந்த நபரிடம் வழங்கியுள்ளார். அந்த நபர் மாரியம்மாள் மகனை ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டு வங்கிக்கு சென்றுள்ளார். வங்கி அருகில் சென்றவுடன் மாணவனை ஜெராக்ஸ் எடுத்து வருமாறு அனுப்பிவிட்டு, மர்ம நபர் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்து மாரியம்மாள் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.