tamilnadu

img

தோழர் சி.கல்யாண சுந்தரத்திற்கு பாராட்டு

சென்னை தீக்கதிர் பதிப்பு பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சி,.கல்யாணசுந்தரம், அவரது இணையர் காசியம்மாள் ஆகியோர் தீக்கதிர் அனைத்து பதிப்புகள் சார்பில் சென்னையில்  ஞாயிறன்று  (ஆக.4) நடைபெற்ற நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர்.  சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் இருவருக்கும் சால்வை அணிவித்து  பாராட்டிப்பேசினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள்  செய்தி ஆசிரியர் மயிலைபாலு, தீக்கதிர் முதன்மை பொதுமேலாளர் என்.பாண்டி, ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், எண்ம பதிப்பு பொறுப்பாசிரியர் எம்.கண்ணன், சென்னை பதிப்பு பொறுப்பாசிரியர் அ.விஜயகுமார், செய்தி ஆசிரியர்கள் சி.ஸ்ரீராமுலு (சென்னை), ஏ.ஆர்.பாபு (கோவை), பொதுமேலாளர்கள் எஸ்.ஏ.மாணிக்கம்(கோவை), எம்.உஷா(சென்னை), ஜோ.ராஜ்மோகன்(மதுரை), ஜே.ஜெயபால் (திருச்சி) தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேல்முருகன், மற்றும் செய்தியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.