கூவம் ஆற்றில் கோயம்பேட்டில் இருந்து தீவுத்திடல் வரை ஈரடுக்கு மேம்பாலப்பணி நடைபெற்று வருகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வேகமாக செல்ல பல இடங்களில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டு ஆற்றை ஆழப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மழைக்காலத்திற்கு முன்பு முடித்தால் வெள்ளக்காலங்களில் கூவம் அதிகமான மழை நீரை வாங்கிக்கொள்ளும்.