திருவனந்தபுரம்/சென்னை, ஜுன் 20- கடுமையான குடிநீர் பற்றாக் குறையின் பிடியில் தமிழகம் சிக்கி யுள்ள நிலையில், சென்னைக்கு 20லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க முன்வந்த கேரள அரசின் உதவி யை தமிழக அரசு நிராகரித்தது என்கிற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. இது தமிழக மக்களி டையே கொதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டின் பிடியில் மக்கள் சிக்கியுள்ளனர். குடிநீருக்கு போதிய மழைப்பொழிவு கடந்த ஆண்டு களில் இருந்த போதிலும், தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள், வரத்துக்கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முறையாக தூர் வாராமல் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு பணத்தை ஆளுங் கட்சியினர் சுருட்டிக் கொண்டதால் மாநிலத்தின் அனைத்துப் பகுதி யிலும் நீர்நிலைகள், மழை பெய்தா லும் நீரை தேக்கி வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளன.
இந்நிலையில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக குறைந்துள் ளது. இது இந்த ஆண்டு மிகப் பெரிய அளவிற்கு குடிநீர் தட்டுப் பாட்டுக்கு காரணமாக அமைந்துள் ளது. இதை எதிர்கொள்ள எந்த உடனடித் திட்டமோ, தொலை நோக்குத் திட்டமோ இல்லாத தமிழக அதிமுக அரசு, குடிநீர் தட்டுப்பாடு என்று எதிர்க்கட்சிகள் கூறுவது வெறும் வதந்தி என்று சிறுமைப் படுத்துவதிலேயே குறியாக இருக் கிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலிக் குடங்களோடு மக்கள் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பினராயி விஜயன் தகவல்
இத்தகைய பின்னணியில்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகருக்கு, திரு வனந்தபுரத்திலிருந்து செல்லும் ரயில் மூலம் 20லட்சம் லிட்டர் குடி நீர் வழங்க கேரள அரசு ஏற்பாடு செய்ய தயாராக இருப்பதாக தெரி வித்த தகவலும் அதை அதிமுக அரசு நிராகரித்த தகவலும் வெளி யாகியுள்ளது. இத்தகவலை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், வியாழனன்று மாலை தனது டுவிட் டர் பதிவு மூலம் வெளிப்படுத்தி யிருக்கிறார். அப்பதிவில், “கடுமை யான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு ள்ள தமிழகத்திற்கு ரயில்மூலம் குடிநீர் வழங்க கேரள அரசு தயா ராக உள்ளது. தமிழக முதல்வ ரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இந்த விவரத்தை தெரி வித்த போது, தற்போது தேவை யில்லை என்று பதிலளிக்கப்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு 20லட்சம் லிட்டர் குடிநீர் ரயில்மூலம் வழங்க திட்ட மிடப்பட்டிருந்தது. சென்னையில் முக்கிய நீராதாரங்கள் வறண்டும் விவசாயத்துறையில் பெரும் பாதிப் பும் ஏற்பட்டுள்ள சூழலில் கேரள அரசு இந்த உதவிக்கு முன்வந்தது” என்று பினராயி விஜயன் குறிப் பிட்டுள்ளார்.
இந்த டுவிட்டர் பதிவு வெளியான உடன், கேரள அரசின் குடிநீர் உதவி யை நிராகரித்த தமிழக அரசின் வறட்டு கவுரவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தமிழக மக்க ளிடையே கொதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதனிடையே தமிழகத்திற்கு குடிநீர் வழங்கிட முன்வந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜ யனுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரி வித்துள்ளார்.