“கமலாலயம் என்பது ரவுடிகளின் புகலிடமாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பற்றியும், கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு குறித்தும் வாய்கிழிய நாள்தோறும் பேசுகிற அண்ணாமலை, கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா உள்ளிட்ட பிரபல ரவுடிகளுக்கும், பாஜகவுக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகி வருவது குறித்து என்ன விளக்கம் தரப் போகிறார்?” என்று காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.