சென்னை, ஆக. 23 - கள்ளர் சீரமைப்புப் பள்ளி களை, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இணைப்ப தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தாக வெளிவந்துள்ள செய்தி கள் உண்மைக்குப் புறம்பா னது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விளக்கம் கொடுத்துள்ளது. சமூக நீதியை நிலைநாட்டு வதில் பெரும் அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.
அந்த வகை யில், மக்கள் தொகையில் பெரும் பகுதியினராக உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் சிறப்புத் திட்டங்களை செயல் படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை யின் கீழ் இயங்கி வரும் 299 கள்ளர் சீரமைப்புப் பள்ளி களில் பயிலும் மாணவர் களுக்கான அனைத்து வசதி களையும் வழங்கி வருகிறது.
மேலும், திறன்மிகு வகுப்ப றைகள், இலவச மருத்துவப் பரிசோதனைகள், ஆங்கில வழிக் கல்வி போன்ற பல் வேறு சிறப்புத் திட்டங்களை யும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், இப்பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இணைப்பதற்கான நட வடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறானதாகும்.
இப்பள்ளிகள் பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை யின் கீழ் தனித்துவத்தோடு இயங்கி வரும் சூழ்நிலையில், அவற்றை மேலும் மேம்படுத்த தேவையான நட வடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. எனவே, இப்பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இனைப்பதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக வெளி வந்துள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானது மற்றும் உள்நோக்கம் கொண்டது ஆகும். இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.