சிபிஎம் வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினரும் சிஐடியு மாவட்ட செயலாளருமான தோழர் லெனின் சுந்தர் (55) கடந்த சனிக்கிழமை அன்று காலமானார். இதையொட்டி கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தோழர் லெனின் சுந்தரின் தாயார் குமுதா, சகோதரர் முகுந்தன், மனைவி ஆண்டாள், மகள் சுதந்திரா, மகன் கீர்த்திவாசன் ஆகியோரை செவ்வாயன்று (ஜூலை 30) நேரில் சந்தித்து ஆறுதல் கூறி விவரங்களை கேட்டறிந்தார். வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவண தமிழன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.சுந்தரராஜ், பகுதிச் செயலாளர் ஆர்.கோபி, எஸ்.வி.வேணுகோபால், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.