சென்னை, ஜூன் 18- நெல்லை மாவட்டம், நாங்கு நேரியில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவனை, சக மாணவர் கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழு வதும் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தியது.
இதையடுத்து பள்ளிகளில் சாதி மோதல்கள் மற்றும் வன்முறை களை தடுப்பதற்கான வழிமுறைக களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலை மையில் ஒரு நபர் குழு அமைக்கப் பட்டது.
அதனடிப்படையிலான தமது ஆய்வறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு செவ்வாயன்று முத லமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கை யில், அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர் நலத்துறை உட்பட எந்த சாதி அடையாளங்களும் இருக்கக் கூடாது என பரிந்துரைக் கப் பட்டு இருப்பதாக கூறப்படு கிறது.
அதே போல் தனியார் பள்ளி களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்றும், சாதி அடை யாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பிறகே புதிய பள்ளி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட் டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட சாதி ஆதிக் கம் உள்ள பகுதிகளில் அதே சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது, ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது சமூக நீதி சார்ந்த அவர் களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும், கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றித் திலகம் உள் ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும், மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண் டும் சாதிப் பெயர் இடம்பெறக் கூடாது, மாணவர்களின் சாதி விவ ரங்கள் ரகசியமாக வைக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பரிந்துரை கள் அந்த அறிக்கையில் இடம்பெற் றுள்ளதாகவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.