சென்னை, ஆக. 27- மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கூட்டு பாலி யல் வல்லுறவு செய்த குற்றவாளிகள் அனை வரையும் உடனடியாக கைது செய்ய வலி யுறுத்தி வியாழனன்று (ஆக.27) கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகம் முன்பு பெண்களும், மாற்றுத்திறனாளிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை டி.பி. சத்திரம் பகுதியில் மன வளர்ச்சி குன்றிய 22 வயது மகளுடன் ஒரு பெண் வசித்து வருகிறார். கடந்த 13ந் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் இளம் பெண்ணை லிங்கன் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து தாக்கியுள்ளனர். கத்தி முனையில் தாயின் கண் எதிரே இளம் பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இது தொடர்பாக அன்றிரவே கீழ்ப்பாக் கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் முதல் தக வல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 9 நாட்க ளாகியும் குற்றவாளிகளை காவல்துறை யினர் கைது செய்யவில்லை. இதனையடுத்து ஆக.21 அன்று அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் துணை ஆணையர் அலுவ லகத்தில் புகார் அளித்தனர். அதன்பின் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டார். குற்ற வாளிகள் அனைவரையும் கைது செய்ய கோரி இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அறிவிப் பனை வெளியிட்ட பிறகு, மற்றொருவரை கைது செய்துள்ளதாக தெரிகிறது. பிரதான குற்றவாளி லிங்கனையும் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு பாதுகாப்பு, இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து காவல் துறை அதிகாரிகள் சங்கத் தலைவர்களை அழைத்து பேசி, குற்றவாளிகள் அனை வரையும் கைது செய்ய காலஅவகாசம் கோரி னர். நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளித்தனர். இந்தப் போராட்டத்தில் மாதர் சங்க மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சாந்தி, செய லாளர் வி.தனலட்சுமி, பொருளாளர் உஷா, பகுதிச் செயலாளர்கள் நாகராணி (எழும் பூர்), நாகரத்தினம் (அண்ணாநகர்), மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் சுரேந்திரன், செயலாளர் எஸ்.மனோன்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.