சென்னை, டிச.10- பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றாக இணைக்கக்கோரி ஜன.8 அன்று வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கம் (ஏஐஐஇஏ) அறிவித்துள்ளது.
சங்கத்தின் அகில இந்திய செயற்குழு கூட்டம் டிச.7-9 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.
இதனையொட்டி சங்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேலைநிறுத்த வெளிநடப்பு
இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனி யார்மயமாக்க ஒன்றியஅரசு முயற்சித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற கூட்டத் தொடரில், இன்சூரன்ஸ் சட்டம், எல்ஐசி சட்டம், ஐஆர்டிஏ சட்டங்களை திருத்த உள்ளது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி மூலதனத்தை 100 விழுக் காடாக உயர்த்த உள்ளது.
இந்தச் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் உடனடியாக ஒரு மணி நேர வேலை நிறுத்த வெளிநடப்பு போராட்டம் நடத்தப்படும். எல்ஐசி, பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை பொதுத்துறையாக பாதுகாப்பதற் கான நடவடிக்கைகளில் தொடர்ந்து போராடுவோம்.
வேலையின்மை 9.43 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்தப் பின்னணி யில் காப்பீட்டு நிறுவனங்களில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப நிர்வாகம் முன்வர வேண்டும். பிப்ரவரி மாதத் திற்குள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிடில் வேலைநிறுத்தம் உள்ளிட்ட தீவிரமான இயக்கத்தை நடத்துவோம்.
வேலைநிறுத்தம்
யுனைடெட் இந்தியா, ஓரி யண்டல் இன்சூரன்ஸ் உள்ளிட்ட 4 பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும். ஊழி யர்களுக்கான ஊதிய உயர்வை கால தாமதமின்றி வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தை 30 விழுக்காடு உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி வருகிறோம். இதனை நிறை வேற்ற வலியுறுத்தி ஜன.8 அன்று 4 பொதுத்துறை காப்பீட்டு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின்போது சங்கத்தின் தலைவர் வி.ரமேஷ், நிர்வாகிகள் பி.பி.கிருஷ்ணன், எஸ்.ரமேஷ்குமார், சர்வ மங்களா உள்ளிட்டோர் உட னிருந்தனர்.