ஜெய்பீம் படமல்ல பாடம், விருது கிடைத்தால் அது விருதுக்கே பெருமை என நடிகர் சூரி கூறியுள்ளார்.
சென்னை – ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெய்பீம் படமல்ல பாடம், “விருது கிடைத்தால் அது விருதுக்கே பெருமை” என நடிகர் சூரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ட்வீட்டர் பதிவில், இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம்ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன். படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன். #ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை என பதிவிட்டுள்ளார்.