உண்ணாவிரதம் இருக்கும் மருத்துவ மாணவர்களின் நிலைமை கவலைக்கிடம்?
கொல்கத்தாவில் பதற்றம்
திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலம் கொல் கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மாணவி பாலியல் வன்கொலை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்து வர்கள், பயிற்சி மருத்துவர்கள் 35 நாட்க ளுக்கு மேல் மேலாக பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். உச்சநீதிமன்ற கோரிக்கை மற்றும் மம்தா அரசின் கோரி க்கை ஏற்பு உத்தரவாதத்தால் 2 வாரத் திற்கு முன்பு மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். ஆனால் மம்தா அரசு கோரிக்கையை செயல்படுத்தாத தால் கொல்கத்தாவில் மருத்துவ மாண வர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், உண்ணாவிரதம் இருக்கும் மாண வர்களில் இருவர் தீவிர உடல்நிலை பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் களின் உடல்நிலை தகவல் குறித்து உறுதி யாக அறிவிக்க முடியாத படி கவலைக்கிட மாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தகவலை அடுத்து கொல்கத்தாவில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
ராஜினாமாவை ஏற்க முடியாதாம்!
மருத்துவ மாணவர்களின் உண்ணா விரதப் போராட்டத்திற்கு ஆதரவாக மேற்குவங்க அரசு மருத்துவமனை களைச் சேர்ந்த 200 மருத்துவர்கள் பலர் ராஜினாமா கடிதத்தை அரசுக்கு அளித் துள்ளனர். இந்நிலையில், “அரசு மருத்து வர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது செல்லாது. மருத்துவ சேவை விதிகளின்படி தனித்தனியாக ராஜினா மாவை சமர்ப்பிக்க வேண்டும். அதனால் 200 மருத்துவர்களின் ராஜினாமா ஏற்கப் படாது” என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகர் அல பன் பந்தோபாத்யாய் கூறியுள்ளார்.
பஞ்சாப் அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்
சம்பா பருவத்துக்கான நெல் கொள் முதல் செய்வதில் தாமதம் ஏற்படு வதாகக் கூறி பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசைக் கண்டித்து மாநிலம் முழு வதும் ஞாயிறன்று விவசாயிகள் போராட் டம் நடத்தினர்.
மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதி களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டும், ரயில் தண்டவாளத்தில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
போராட்டக்களத்தில் விவசாயிகள் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கூறு கையில்,”நெல் கொள்முதல் தொடர்பாக மாநில அரசு உத்தரவாதம் அளித்த போதிலும், விவசாயிகள் சந்தை யில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மேலும், தங்களின் விளைச்சல் பொருட் கள் சந்தைக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் தான் போராட்டத்தில் ஈடுபடு கிறோம்” என அவர் கூறினார்.
பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது
பாபா சித்திக் படுகொலைக்கு வலுக்கும் கண்டனம்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (அஜித்) மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக்கை (66) சனியன்று இரவு 9.30 மணியளவில் அடையாளம் தெரி யாத 3 நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
பாபா சித்திக்கை கொன்ற 3 பேரில் உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். மூன்றா வது நபரைத் தேடும் பணி நடை பெற்று வருகின்றது என மும்பை காவல்துறை தரப்பில் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. பாபா சித்திக் மர ணத்திற்கு அரசியல் கட்சித் தலை வர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட் டோர் இரங்கல் தெரிவித்து வருகின்ற னர்.
இந்நிலையில், பாபா சித்திக் படு கொலைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில்,”பாபா சித் திக் படுகொலை சம்பவம் மிக வும் துயரமானது. இந்த துயரமான தரு ணத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்கிறோம். மகா ராஷ்டிராவில் சட்டம் -ஒழுங்கு சீர் குலைந்து போயிருக்கிறது என்ப தையே இந்த கொடூர சம்பவம் வெளிப் படுத்துகிறது. மகாராஷ்டிரா அரசு தான் இந்த படுகொலை சம்ப வத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
இதே போல தேசியவாத காங்கி ரஸ் (சரத்), சிவசேனா (உத்தவ்) உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சி கள் மகாராஷ்டிரத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் முக்கி யத் தலைவர் ஒருவர் பலியாகியுள் ளார் என கண்டனம் தெரிவித்துள்ள னர்.
முகநூலில் அறிவிக்கும் அளவிற்கு தைரியம்
பாபா சித்திக் படுகொலைக்கு தில்லியைச் சேர்ந்த ரவுடி லாரன்ஸ், பிஷ்னோய் கூட்டாளிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். இது தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி சுப்பு லோன்கர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், “நாங்கள்தான் பாபா சித்திக்கை சுட்டுக்கொலை செய் தோம். நடிகர் சல்மான் கான் தான் சண்டையை தொடங்கினார். சல்மான் கானுக்கு உதவி செய்ய நினைப்ப வர்களுக்கு அடுத்த குறி வைக்கப் படும். நாங்கள் இந்த சண்டையை விரும்பவில்லை. ஆனால் எங்களது சகோதரனை கொன்றுவிட்டார்கள்” என கூறப்பட்டுள்ளது.
ஐ.நா.பொதுச் செயலாளருக்கான இஸ்ரேல் தடையை இந்தியா கண்டிக்காதது ஏன்?
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குத் ரேஸ் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைய அந்நாடு தடை விதித்திருப்ப தைக் கண்டிக்கும் கடிதத்தில் இந்தியா கையெழுத்திடாதது ஏன் என மோடி அர சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகையில்,”ஐக்கிய நாடு களின் பொதுச்செயலாளர் தங்களின் எல்லைக்குள் நுழைய தடைவிதித்துள் ளது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலைக் கண்டிக்கும் கடிதத்தில் 104 நாடுகளில் இந்தியா ஏன் இணைந்து கொள்ள வில்லை என்பதை புரிந்து கொள்ளமுடிய வில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அரசியலுக்கு அப் பாற்பட்ட ஓர் அலுவலர். அரசியல் வேறு பாடுகளை வெளியேற்றுவதற்கு இருக் கும் ஒரே சர்வதேச அமைப்பு ஐக்கிய நாடுகள் சபை மட்டுமே. அப்படி இருக் கையில் தங்கள் நாட்டுக்குள் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் நுழைய இஸ்ரேஸ் தடைவிதித்திருப்பது மிகவும் தவ றானது. இஸ்ரேலின் செயலைக் கண்டிக் கும் கடிதத்தில் கையெழுத்திடும் முதல் நாடாக இந்தியா இருந்திருக்க வேண் டும்” என அவர் கூறியுள்ளார்.