tamilnadu

img

அதானியை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

லஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ள அதானியை கைது செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (நவ.26) கந்தன்சாவடியில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோழிங்கநல்லூர், வேளச்சேரி பகுதிக்குழுக்கள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், கே.வனஜகுமாரி, பகுதிச் செயலாளர்கள் பி.ஜெயவேல் (சோழிங்கநல்லூர்), எஸ்.முகமது ரஃபி (வேளச்சேரி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.