tamilnadu

விளையாட்டு விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

விழுப்புரம், ஏப்.30-தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், விளையாட்டு மைய விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், பள்ளி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சிறந்த பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய, 5 முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி செயல்பட்டு வருகின்றன. இதேபோல், சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.இதில், சேர விருப்பம் உள்ள 6 ஆம் வகுப்பு, 7 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள், சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் வரும் மே 21 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, றறற.ளனயவ.வn.படிஎ.in என்ற இணைய தள முகவரியில், வரும்மே 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.கூடுதல் விபரங்களை, மேற்கண்ட இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

;