சென்னை, செப்.2- தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்ப தற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக் காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள் ளார்.
சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர் களுடன் நடைபெற்ற சந்திப்பில் இதுவரை 8 நிறு வனங்களுடன் 4,600 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ. 1300 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டன.
முன்னதாக அமெரிக்கப் பயணம் பற்றி முதல்வர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அன்னை மண்ணைப் பிரிந்து அய லகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வு எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக் கொள்ளும் நம் உறவுகள்! தங்களது உழைப்பா லும் - அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டி ருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்!” எனப் பதிவிட்டிருந்தார்.
முதல் கட்ட பணிகளை தொடங்கிய கிரீன்கோ
கடந்த மாதம் 21 ஆம் தேதி சென்னையில் நடை பெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கிரீன்கோ நிறுவனத்துடன் ரூ.20,114 கோடி முதலீட்டில் மூன்று புனல் மின் நிலையங்களை அமைக்க அமைச்சர் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில் முதல் கட்டப் பணிகளை தொடங்கி யது கிரீன்கோ நிறுவனம். அதன்படி சேலம் மாவட்டம், மேட்டூர் பாலமலை மற்றும் நவிப்பட்டி ஆகிய கிராமங்களில் ரூ. 5,947 கோடியில் கிரீன்கோ எனர்ஜி நிறுவனம் நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்கிறது. இதற்கான கட்டு மானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பம் அளித்துள்ளது.