நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகச் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டுமெனச் சென்னைபட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கினை விசாரிக்க விசாரணை அதிகாரியாகச் சென்னை பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.