சென்னை, செப். 6- சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நியுபெர்க் டயக்னோஸ்டிக்ஸ் நிறுவனம் நோயறிதலில் உயர்வான சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை மூலமாக எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் நோயறிதலுக்கான சேவை கிடைக்கும். நீங்கள் விரும்பும் இடத்திற்கே வந்து ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரி கள் சேகரிக்கப்படும். இசிஜி சேவையும் கிடைக்கும். சென்னை, பெங்களுரு, கொச்சின் மற்றும் ஐதராபாத் அகிய நகரங்க ளில் வழங்கப்படும் என்று சென்னையில் செய்தியாளர்களி டம் பேசிய நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒரு தனி நபருக்கு சௌகரியமாக இருக்கின்ற எந்தவொரு அமை விடத்திலிருந்தும் மாதிரிகளை இப்போது சேகரிக்க இயலும் என்றார். இத் திட்டத்தின் அறிமுக சலுகையாக, கட்டண மின்றி இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பேட்டியின் போது நியுபெர்க் தலைமை நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் டாக்டர்.பி. சீனிவாஸ், டாக்டர். சரண்யாநாராயண் ஆகியோர் உடனிருந்தனர்.