கடலூர், ஆக. 8- தமிழக காவல் துறையில் கடலூர் மாவட் டத்தில் முதன்முறையாக இ-சலான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி மோட்டார் வாகன விதிமீறல்களில் சிக்கிக்கொள்வோரி டம் இ-சலான் மூலம் அபராதம் வசூலிக் கப்படும். மோட்டார் வாகன விதிமீறல் அபராத தொகையினை ஏ.டி.எம் கார்டு மூலம் வசூ லிக்கபடும்.ஏடிஎம் கார்டு இல்லாதவர்கள் இ-சலான் ரசீதை அருகிலுள்ள இ-சேவை மையம், தபால் நிலையம் , பாரத ஸ்டேட் வங்கியில் அபராத தொகையினை செலுத்த வேண்டும். a அபராத தொகை செலுத்தாதவர்கள் விப ரம் ஆன்லையனில் நிலுவையில் இருக்கும். தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் அபராத தொகை செலுத்தாத வாகனங்கள் காவல் துறையினர் மூலம் பறிமுதல் செய்யபடும். இந்த கருவி மூலம் வாகன பதிவு எண்ணை பதிவு செய்யும் பொது வாகன உரிமை யாளர் முகவரி, காப்பீடு விபரம், அனைத்தும் தெரிய வரும். மேலும் வாகன ஆவணங்க ளில் ஏதேனும் குறைபாடு இருந்தால் சிவப்பு சமிக்கை மூலம் அடையாளம் காட்டபடும். நாடு முழுவதும் உள்ள வாகனங்களின் விப ரங்கள் இந்த கருவியில் தெரியவரும். இந்த திட்டத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ஸ்ரீஅபிநவ் துவக்கி வைத் தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர பாண் டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.