tamilnadu

img

அனைத்து வீடுகளிலும் இணையதள வசதி

சென்னை:
மத்திய அரசின் உதவி யுடன் விரைவில் அனைத்து வீடுகளிலும் இணைய வசதி வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலு  வலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது: அரசு அலுவலகங்களில் காகிதம் இல்லாத நிலையை அடைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பு வெளி யிடுவார். அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இணையதள வசதியை மேம்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவி யோடு விரைவில் அனைத்து இல்லங்களிலும் இணைய வசதி வழங்கப்படும். முத லமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் போது, சான்பிரான்சிஸ்கோவில் செயல்படுத்தப்பட்டு வரும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங் களை, தமிழகத்திலும் கொண்டு வரும் முயற்சி களை அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

;