பாலவித்யாலயா காது கேளாத இளம் குழந்தைகளுக்கான பள்ளி, காது கேளாதோர் மற்றும் கேட்கும் திறன் குறைவாக உள்ள குழந்தைகளை வளர்ப்பது தொடர்பான இரண்டுநாள் சர்வதேச மாநாட்டை சென்னையில் நடத்தியது. இதில் மும்பையில் உள்ள அலி யவர் ஜூங் தேசிய பேச்சு மற்றும் கேட்டல் குறைபாடுகள் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சுனி மேத்யு, டாக்டர் ரத்னா, கொலராடோ பல்கலைக் கழக ஆராய்ச்சி பேராசிரியர் டாக்டர் கிறிஸ்டின் யோஷினாகா இட்டானோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.