சென்னை, ஜூலை 27- தனியார் பள்ளிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தென் சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சுபாஷ், செயலாளர் தீ.சந்துரு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரடங்கால் சென்னையில் மக்கள் வீடு களில் முடங்கியுள்ளனர். பொருளாதார ரீதி யாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி யாண்டு துவங்கியுள்ள நிலையில் பல தனி யார் பள்ளிகள், 10ம் வகுப்பு முடித்து வேறு பள்ளிக்கு செல்ல விரும்பும் மாணவர் களிடம் மாற்று சான்றிதழை தராமல் அலை கழிக்கின்றன. கல்வி கட்டணத்தை உடனடியாக கட்ட முடியாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பு களை விட்டு நீக்கி மனரீதியாக பாதிப்படை யச் செய்கிறார்கள்.
முதன்மை பாடப்பிரிவு களில் சேர கூடுதல் தொகை தனியாக வசூலிக் கின்றனர். குறிப்பாக எஸ்பிஒஏ மெட்ரிகுலே ஷன் பள்ளிகள், வள்ளியம்மை மெட்ரிகுலே ஷன் பள்ளி, பெத்தேல் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஆல் ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, எம்ஏகே மெட்ரிகுலேஷன் பள்ளி உள் ளிட்ட பள்ளிகள் இத்தகை செயல்களில் ஈடு பட்டுள்ளன. எனவே, தமிழக அரசும், தமிழ்நாடு மெட்ரி குலேஷன் பள்ளி கல்வி இயக்ககமும் தனி யார் பள்ளிகளின் இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும், கல்வியாளர்கள், மாணவப் பிரதிநிதிகள், பெற்றோர்-ஆசிரி யர் கழக பிரதிநிதிகள், கல்வி அமைச்சக பிரதி நிதிகள் அடங்கிய ஒரு குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும். விதிகளை மீறும் தனி யார் பள்ளிககளின் உரிமத்தை ரத்து செய்வ தோடு, அந்த பள்ளி நிர்வாகிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.