சென்னை, ஜூலை 10- சென்னை கேசவன் பூங்கா திட்டப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட 864 வீடுகளை பயனாளர்களுக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சிபிஎம் எழும்பூர் பகுதிச் செயலா ளர் கே.முருகன் கூறியிருப்ப தாவது:- சென்னை கேசவன் பூங்கா திட்டப்பகுதியில் பழுதடைந்த கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டடங்களை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டி வருகிறது. ஏற்கனவே 1 முதல் 14 வரை கட்டடங்களை இடித்துவிட்டு புதிய வீடுகளை ஒப்படைத்துள்ள னர். இந்நிலையில், மீதமுள்ள 15 முதல் 35 வரையிலான கட்டடங்களை இடித்து, புதிய கட்டிடங்கள் கட்டும் பணி, கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது. 18 மாதங்க ளில் கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு பயனாளர்க ளுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் பயனாளர்களுக்கு ஒரு மாத வாடகை தொகை மட்டும் அரசு வழங்கியுள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தற்காலிக தகர வீடுகள் உருவாக்கப்பட்டு அதில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த வீடுகளில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. ஜூலை மாதத்திற்குள் வீடுகளை பயனாளர்களுக்கு வழங்க ப்படும் என தெரிவிக்க ப்பட்டது. ஆனால், இன்னும் குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. குடிசை மாற்று வாரியத்தின் மெத்தனப் போக்கால் அப்பகுதி மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துவருகின்றனர். எனவே, ஜூலை மாதத்திற்குள் பயனாளர்க ளுக்கு வீடுகளை ஒப்படைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுத்திட வேண்டும் எனவும், 14வது பிளாக்கில் இருந்து தொடர் எண்ணாக புதிய குடியிருப்புகளுக்கு வழங்க வேண்டும், அதே போல 1 முதல் 14 வரையிலான பிளாக்குகளில் உள்ள அடிப்படை வசதிகளை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநரிடம் சிபிஎம் கே.பி.பார்க் கிளை சார்பில் கிளைச் செயலாளர்கள் ஈ.அன்பு, வி.சரவணன் ஆகியோர் அளித்தனர்.