tamilnadu

img

தையல் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

திருவண்ணாமலை, ஆக. 28- தையல் கலைஞர்களின் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என  திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர்கள்  வலியுறுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட தையல் கலை தொழிலாளர்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு பேரவை கூட்டம் வேங்கிக்காலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏ.மேரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு தையல் கலை ஞர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுச்செய லாளர் எம். ஐடா ஹெலன் பங்கேற்று, சிறப்பு ரையாற்றினார். பொதுச் செயலாளர் எம்.வீர பத்திரன்,  சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், சிஐடியு நிர்வாகிகள் கே. காங்கேயன், இரா.பாரி,  சி.எஸ்மணி, எம். ரவி,  எஸ். தண்டபாணி, கமலக்கண்ணன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.  இதில், தையல்கலைஞர் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், 60 வயது  பூர்த்தியான தொழிலாளர்களுக்கு மாதம் மூன்றாயிரம் நிதி வழங்க வேண்டும், தையல்  தொழிலாளர்களுக்கு, தேசிய வங்கிகளில் கடன் வழங்க வேண்டும்,  வறுமை கோட்டிற்கு  கீழ் உள்ள பெண்களுக்கு  தையல் இயந்திரம் வழங்க வேண்டும்,  சிறுபான்மையின பெண்  தொழிலாளர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தில், தையல் இயந்திரம் வழங்க  வேண்டும்,  திருவண்ணாமலை மாவட்டத்தில்  தையல் பயிற்சி பள்ளி துவக்க வேண்டும், பள்ளிகளில் தையல் பாடப்பிரிவு  துவக்குவது டன்,  தையல் ஆசிரியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.